இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ரு ஃப்ரீமேனின் படைப்புகளை பாராட்டி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அப் பதிவில், இலங்கை – அமெரிக்க எழுத்தாளர் ரு ஃப்ரீமேன் போன்ற படைப்பாளர்களை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஆன் சல் மால் லேன்” On Sal Mal Lane உட்பட அவரது நாவல்கள், குழந்தைப் பருவம் மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஆகியவற்றை ஆராய்கின்றன, மேலும் பன்முகத்தன்மை கொண்ட வகையில் அமெரிக்க கலாச்சாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
“ஆன் சல் மால் லேன்” நாவலானது மே 18, 2013 அன்று வாஷிங்டன், கொலம்பியா மாவட்டத்தில் உள்ள இலங்கை இல்லத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கையின் நீண்ட மற்றும் கசப்பான மோதலைச் சுற்றியுள்ள கதைக்களத்தை முன்வைக்கும் இந்த நாவல், நல்லிணக்கத்திற்கான ஒரு உரத்த குரலாக விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்பதும் குறிப்பிடத்தக்கது,