
கொழும்பு, மே 23
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாக அமெரிக்க தூதுவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.