யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.