
கொழும்பு,மே 23
நாட்டில் தற்பொழுது பொருளாதார நெருக்கடி மேலெழுந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அந்த சங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்துப் பிரஜைகளுக்கும், 3 வேளை உணவை உறுதிப்படுத்த தாம் முன்னுரிமையளித்து செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.