மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

<!–

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை! – Athavan News

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று இரவு 10 மணிக்கு மூடப்படவிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 மணி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வரிசையில் நின்றவர்கள் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கீழ்ப்படியாமல் 3.30 மணி வரை எரிபொருளை விநியோகிக்குமாறு பலவந்தமாக கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநிலை நீடித்தால், இந்த சேவையை தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *