வைத்தியர் மாறியதால் உயிரிழந்த நாய்! அம்பலமான உண்மைச் சம்பவம்

வெயங்கொட – பத்தலகெதர பிரதேசத்திலுள்ள மிருக வைத்திய நிலையமொன்றில், பெண் மிருக வைத்தியருக்கு பதிலாக அவரது கணவர் சிகிச்சை வழங்கியதால், நாயொன்று உயிரிழந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நாயின் உரிமையாளர், வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மிருக வைத்திய நிலையத்தின் பெண் மிருக வைத்தியர், குழந்தை பேற்றுக்குப் பின்னர் வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் அவருக்கு பதிலாக அவரது கணவர் மிருகங்களுக்கு சிகிச்சை வழங்குவதாகவும் தெரியவருகிறது.

இதன் காரணமாக தனது நாய் உயிரிழந்ததாக நாயின் உரிமையாளர் முறைப்பாடளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *