நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் பல்வேறு பட்ட அரசியற் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் இன்றையதினம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது ருவிட்டர் பக்கத்தில்,
அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக, அனைத்து இலங்கை மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் இலங்கையின் ஆழமான வேரூன்றிய பொருளாதார பிரச்சினைகளுக்கு நீடித்த அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவன வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

