
சிறுமி மீது துஷ்பிரயோகம் இளைஞன் கைது!
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயதுச் சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக காங்கேசன்துறை பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.