
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக மீன் சந்தையில் சடுதியாக விலைப் பட்டியல் அதிகரித்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் தமது வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஸ்ஸ சந்தையில், தற்போது ஒரு கிலோ சூரை மீன் ரூ. 1,100/- க்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிப்பை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.