ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி ஒன்றுதிரண்ட மக்கள்!

காலிமுகத்திடல் பகுதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணம் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நுழைவாயில் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *