யாழ் எரிவாயு விற்பனை நிலையத்தில் பதற்றநிலை(வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போதும் எரிபொருள் கிடைக்காததன் காரணமாக குறித்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்று எரிவாயு வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் காலை 7 மணி முதல் வரிசையில் காத்திருந்தும், உரிய முறையில் மக்களுக்கு எரியவாயு வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததன் பின்னர் குழப்பமடைந்த மக்கள், தங்களை விற்பனை நிலையத்துக்குள் உட்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், நிலையத்திக்குள் எரிவாயு இருக்கின்றதா இல்லையா என பார்க்கின்றோம் என்று கூறி முகவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னர் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர் மாலை 3 மணியளவில் எரிவாயு மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

வீடியோ இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *