
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்டவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் பதவிகளை ஏற்காமல், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கம் எடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எந்தவொரு கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை புறக்கணித்தால், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மத்திய குழு நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.