
கொழும்பு, மே 24:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ( சிவனேசத்துரை சந்திரகாந்தன்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “‘நாம் ஏற்கனவே அரசாங்கத்துடனேயே இணைந்துள்ளோம்.
எவ்வாறாயினும், அமைச்சு பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.