நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறினார்.
அத்துடன், காலிமுகத்திடல் பகுதியில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணம் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.