புலம்பெயர் உறவுகளினால் பாண்டிருப்பில் “ஆகாரா” தொழில் முயற்சிக்கு உதவி!
புலம்பெயர் உறவுகளின் அனுசரணையோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் பாண்டிருப்பு மாதர் அபிவிருத்தி சங்கத்தால் நடாத்தப்படும் ஆகாரா உணவு உற்பத்தி பொதி செய்து சந்தைப்படுத்தல் செயல் திட்டத்திற்காக சுமார் இரண்டு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி உடைய அரிசி பொதிகளை வழங்கி வைக்கப்பட்டன .
மேலும் இந்நிகழ்வில் நிதான்சன் உரையாற்றும்போது,
அரசின் தவறான கொள்கையின் காரணமாக நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஓரளவேனும் மக்கள் சுமையை குறைக்க நம்மவர்கள் முன்வர வேண்டும்.அரச ஊழியர்களாக உள்ளவர்களே இன்று திண்டாடும் நிலைக்கு சென்றுள்ளனர். இந் நிலையில் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நாம் செயல்பட வேண்டும்.எமது பிரதேசத்தில் உள்ள வழங்களை நாம் பயன்படுத்தி அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது.எதிர்காலத்தில் மக்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசு சார் பிரதிநிதிகளுக்கு தக்கப்பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.



