
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது.
இதேவேளை சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரச மருந்தாளர் ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன,
தற்போது இவ்வாறான நோயாளர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறியுள்ளார்.