
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிவாயுவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் எரிவாயு நிரப்பிய கப்பல்கள் பல தடவைகள் நாட்டிற்கு வருகை தரும் நிலையிலும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்கின்றது.
இந்நிலையில் நாளைய(27) தினமும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை கடந்த 3 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளைய தினமும் குறித்த பணிகள் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.