
3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் நாட்டுக்கு வந்தடையவிருந்த கப்பலுக்கு எரிபொருள் இல்லாததால் குறித்த கப்பல் நாட்டை வந்தடைய தாமதமாகும்.
இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றும் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய இரு கப்பல்கள் இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று வந்தடையவிருந்த கப்பலுக்கு எரிபொருள் வழங்க முடியாததால் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாள்களாகும். எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.