
கொழும்பு,மே 26
மே 09ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியு.டி. வீரசிங்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் புதன்கிழமை (26) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது .
நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியு.டி. வீரசிங்கவிடம் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.