நாளை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *