எரிபொருள் இல்லாமையால் இந்தியா போகும் எரிவாயு கப்பல்

கொழும்பு,மே 26

இன்று வியாழக்கிழமை இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும்.

எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *