
உக்ரேன்,மே 26
உக்ரேன் மீதான போரில் ரஷ்யாவினால் வெற்றி பெற முடியாது என ஜேர்மன் அதிபர் Olaf Scholz தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி தனது மூலோபாய நோக்கங்களில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே உக்ரேன் மீதான யுத்தத்தின் மூலம் எந்தவொரு சாதகமான பிரதிபலனையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை ரஷ்ய ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யுக்ரேனுடனான போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவது முழு உலகிற்கும் நன்மை தரக் கூடியதாக இருக்கும் எனவும், ஜேர்மன் அதிபர் Olaf Scholz சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த போர் நடவடிக்கையின் காரணமாக ஏனைய நாடுகள் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த யுத்தத்தின் காரணமாக ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி பல தசாப்தங்கள் பின்னோக்கி செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக யுத்த நடவடிக்கையில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஜேர்மன் அதிபர் Olaf Scholz வலியுறுத்தியுள்ளார்.