
கொழும்பு,மே 26
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜுலை வரை, நாட்டில் போதுமான மருத்துவப் பொருட்கள் இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பல நாடுகளில் இருந்து பல உதவிகள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.