பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படையிரும் இணைவு

பொத்துவில்,மே 26

பொத்துவில் பிரதேச கடலில் இயந்திர படகில் மீன்பிடிக்க நேற்று புதன்கிழமை அதிகாலை சென்ற சென்ற இருவர் இதுவரை கரைக்கு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக இருவரது உறவினர்களும்  இன்று வியாழக்கிழமை (25) முறைப்பாடு செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பாக்கியவத்தை பகுதியைச் சேர்ந்த  42 வயதான  முகமட் நௌவ்பர் மற்றும் 40 வயதுடைய முகமது தாஹீர் ஆகிய மீனவர்  இருவரும் சம்பவதினமான புதன்கிழமை அதிகாலை மீன்பிடிப்பதற்காக பொத்துவில் கடற்கரையிலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் மீன்பிடித்துக் கொண்டு அன்றைய தினம் மாலையில் கரைக்கு திரும்ப வேண்டிய நிலையில் இன்று வியாழக்கிழமை பகல் வரையில் கரைக்கு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *