
கொழும்பு,மே 26
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,800ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 646945 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.