பஸ் – லொறி மோதி விபத்து; இளைஞன் பலி!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தெமடபிடிய பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அநுராதபுரம், நெளும்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, புத்தளம் பகுதியை நோக்கி பயணித்த லொறியொன்றும் எதிர்த்திசையில் இருந்து பயணித்த பயணிகள் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக குறித்த விபத்தில் சிக்கிய லொறியின் சாரதியான 25 வயதுடைய இளைஞரை மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *