மீன்பிடிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்து ஒருவர் பலி

காத்ததான்குடி, மே 27

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது  தோணி கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.  மேலும் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை கடலில் மீன்பிடிப்பதற்கான மீன்பிடிப்பதற்காக சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது சுழல் காற்று காரணமாக தோணி நடுக்கடலில் மூழ்கிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குறித்த மீனவர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பாலமுனையில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் 52 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையெனவும் தெரியவந்துள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *