வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி

வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (23) இடம்பெற்றது.

இதன்போது, மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவை வலைப்படகுகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *