தென்னாசியா பிராந்திய பாதுகாப்பு அமர்வு துஷான்பெய் நகரில் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் அவர்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் மேற்படி பிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடலானது தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பெய் நகரில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த தொடரில் மனித உரிமைகள் மீறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பற்ற விதத்தில் கையாளப்படுகின்றமை தொடர்ப்பிலும், சிறுபான்மை இன மக்களின் வாழ்வுரிமை நசுக்கப்படுகின்றமை தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தொடரில் இந்திய பிரதிநிதி, ரஷ்ய பிரதிநிதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் இந்த கலந்துரையாடலானது உக்ரைன் மீதான போர் ஆரம்பித்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது கலந்துரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆப்கான் ஆட்சியாளர்களான தலிபான்களும் மேற்படி கூட்டத் தொடரில் தமது பங்களிப்பை வழங்கியிருப்பதுடன் , இந்தியா ஆப்கானிஸ்தானின் அரசமைப்பில் தலையிட வேண்டும் என்றும் இந்தியாவின் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் எமக்கு அதிகம் தேவை எனவும் ஆப்கான் பிரதிநிதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கூட்டத் தொடர் நான்காவது தொடராக நடைபெற்று வருவதாகவும் இதற்கு முந்தைய தொடர் இந்தியாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.