நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்களுக்கு அரசின் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இலகுவான முறையில் அத்தியவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்று கொடுப்பது தொடர்பான ஒன்றுகூடல் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மது கனி தலைமையில் இன்று (27) கிண்ணியா பிரதேச செயலக மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற மின்சார பிரச்சினை ,.குடிநீர் பிரச்சனை ,அத்தியாவசிய பொருட்கள் பிரச்சினை, மீனவர்களுக்கான எரிபொருள் பிரச்சினை ,.உப்பு செய்கையாளர்களுக்கான எரிபொருள் பிரச்சினை மற்றும் ஆட்டோ சாரதிகளுக்கான எரிபொருள் பிரச்சினை , பொதுமக்களுக்கான எரிபொருள் பிரச்சினை ,அரச ஊழியர்களுக்கான எரிபொருள் பிரச்சினை என்பன தொடர்பில் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பொலிசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய கிண்ணியா பிரதேச செயலாளர்,
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 3 எரிபொருள் நிலையங்களிலும் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை கிண்ணியா மக்களுக்கு உடனடியாகவும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும்,
சட்டவிரோதமான முறையில் பொருட்களை பதுக்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சுற்றிவளைத்து அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர் மக்களின் அசாதாரண சூழ்நிலையில் இருந்து விரைவாக மீட்பதற்காக அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான செயல்திட்டங்களை அரச கொள்கை திட்டத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகவும், கிண்ணியா பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் முஸ்தபா நிவாஸ் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத்,
கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் ஏ. அஸ்வத் கான்
கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. எம் எம் சௌபான் அவர்கள் மற்றும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்னான்டோ , பாதுகாப்பு படை பிரிவின் பொறுப்பதிகாரி,
மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிண்ணியா பிரிவுக்கான பொறுப்பதிகாரி,வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிநிதி,இலங்கை மின்சார சபையின் கிண்ணியா பிரிவுக்கான பொறுப்பதிகாரி,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளை தலைவர்,
அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியத்தின் தலைவர், உட்பட ஆட்டோ சங்கம் மீனவர் சங்கம் உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள் தலைவர்கள் வர்த்தக சங்கம் பெட்ரோல் விற்பனையாளர்கள் சதோச நிறுவனத்தின் முகாமையாளர் பல்நோக்கு விற்பனை நிலையத்தின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



