மண்ணெண்ணெய் இல்லை – பாலமுனை கடலில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

<!–

மண்ணெண்ணெய் இல்லை – பாலமுனை கடலில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு! – Athavan News

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக படகில் தொழிலுக்குச் செல்ல வேண்டிய மீனவர்கள் சாதாரண தோணியில் மீன்படிக்கச் சென்றமையால் தோணி கவிழ்ந்து மீனவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) மீன்பிடிப்பதற்கான மீன்பிடி படகிற்கு மண்ணெண்ணெய் இன்மையால் சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது சுழல் காற்று காரணமாக தோணி நடுக்கடலில் மூழ்கிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மரணமான குறித்த மீனவர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் பாலமுனையில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் 52 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையென பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *