240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் வசமாக சிக்கினார்!

240 லீற்றர் பெற்றோலுடன் 50 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்டம், மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் வியாபார நிலையத்தில் அதிக விலைக்குப் பெற்றோல் விற்பனை செய்யப்படுகின்றது எனப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் இருந்து மொத்தமாக 240 லீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர், பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர் பதுளை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பிற செய்திகள்

  1. யாழில் சினைப்பசுவை இறைச்சியாக்கிய கொடுமை – கண்டுகொள்ளாத பொலிஸார்!
  2. நாவாந்துறையில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!
  3. சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு
  4. ஜீ.எல். பீரிஸைச் சந்தித்த பிரித்தானியத் தூதுவர்
  5. நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவில் ஏற்படவுள்ள மாற்றம்
  6. கட்டுமானத்துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!
  7. எழுதுமட்டுவாழில் கைக்குண்டு மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *