
மும்பை சொகுசுக் கப்பலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் உட்பட 8 பேரை என்.சி.பி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகிய ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 5 பேர் போதிய ஆதாரம் இல்லாமையால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆர்யன் கான் மற்றும் மோஹக் தவிர குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரிடமும் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு நபர்களுக்கு எதிரான புகார், ஆதாரம் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை.” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.