பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; புகையிரதக் கட்டணமும் உயர்வு?

குறைந்த புகையிரதக் கட்டணங்கள் உள்ளிட்ட இலங்கை புகையிரதத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்க் கொண்டு ரயில் டிக்கெட் விலையை உயர்த்தும் முடிவில் தமது தொழிற்சங்கம் உறுதியாக இருப்பதாக தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விலை அதிகரிப்பு புகையிரத பயணிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவுகளை வழங்க அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் பஸ் கட்டண அதிகரிப்பு காரணமாக புகையிரதத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலுவலக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் டிக்கெட் விற்பனை மூலமான வருமானமும் 10% அதிகரித்துள்ளது.

பஸ் கட்டணத்தை விட ரயில் டிக்கெட்டின் விலை குறைவு என்பதால் பணத்தை சேமிப்பதற்காக பஸ்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலில் பயணிக்க விரும்புவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் சுமார் 02 இரவு அஞ்சல் புகையிரதங்கள் இயங்கி வருவதுடன் 03 சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்போது இயக்கப்படாத ரயில்களையும் சேவையில் சேர்க்க வேண்டும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், பயணச்சீட்டுக் கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டுமென தமது சங்கம் நிர்வாகத்திடம் யோசனை தெரிவித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. கட்டுமானத்துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!
  2. ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
  3. சமூகவலைத்தளத்தில் ஒன்றாக வலம்வந்த ஜோடி; ஒரே நாளில் உயிரிழந்த சோகம்
  4. 21வது திருத்தச் சட்டம்; ஜனாதிபதியிடம் பெப்ரல் விடுத்துள்ள கோரிக்கை
  5. 2022ன் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் உயர்வு!
  6. தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை கைப்பற்றாத சி.ஐ.டி!
  7. ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்பேன்; பதவி விலகமாட்டேன்! ஜனாதிபதி சபதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *