
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு துறை சார் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருடாந்த அறிக்கைகளை அச்சிடுவதை நிறுத்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது
காகிதம் மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 மற்றும் 2022 மார்ச் 31 ஆம் திகதிக்கான வருடாந்த அறிக்கைகளை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) நேற்றையதினம் (27) தெரிவித்துள்ளது.