வன்முறைகளை தூண்டவில்லை; சம்பவங்களை பின்னரே அறிந்தாராம் மகிந்த!

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் கடந்த 9 ஆம் திகதி கலவரமான சம்பவங்கள் நடந்ததை தான் அன்றைய தினம் மாலை நேரத்திலேயே அறிந்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அப்படியான சம்பவங்கள் நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்ததால், அவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பேன்.

வன்முறை சம்பவங்கள் நடக்கும் என அறிந்திருந்தால், கட்சியினரை அலரி மாளிகைக்குள் அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தான் தூண்டுதல் எதனை மேற்கொள்ளவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கும் போதே முன்னாள் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சுகவீனமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள விசேட இடமொன்றில், அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *