வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிய எம்.பி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாவல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் வரிசையில் காத்திருந்து முகநூல் நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை பிற முன்னுரிமை வழிகள் மூலம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், ஹர்ஷ டி சில்வா தனது வாகனத்திற்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகின்றார்.

நாவல வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் 95 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 50 வாகனங்கள் மாத்திரம் வரிசையில் நிற்பதால் நிரப்ப விரும்புவோர் அங்கு வருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால அடிப்படையில் எரிபொருள் மற்றும் உரங்களைப் பெறுவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் எவ்வாறு பெறப் போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அந்தக் குறுகிய காணொளியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

“எனக்குத் தெரியாது, நான் இப்போது மிகவும் சோர்வாக இருக்கிறேன். ஆனால் முயற்சி செய்வோம், எங்களுக்கு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, ”என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *