
கொழும்பு,மே 29
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பகல் இரவு ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா அணி 03 இருபதுக்கு 20 மற்றும் 05 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
அத்துடன் ஒருநாள் போட்டிகள் பகளிரவு ஆட்டங்களாகவும் இருபதுக்கு 20 போட்டிகள் இரவு நேர ஆட்டங்களாகவும் இடம்பெறவுள்ளது.
மேலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டீசலில் இயங்குகின்ற பெரிய ரக ஜெனலேட்டர்களை இந்த போட்டித்தொடரின் போது பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது