சஷி வீரவங்கச நீதிமன்றத்தில் முன்னிலை

சஷி வீரவங்கச சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவங்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச மேன்முறையீடு செய்திருந்தார்.

தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *