குரங்கு அம்மை நோய் தொடர்பான ஊடகவியல் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொது வைத்திய நிபுணர் Dr கஜந்தன் , Dr கேதீஸ்வரன் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குரங்கு அம்மை நோயானது பரவும் வழிகள்,அறிகுறிகள் ,சிகிச்சை முறைகள்
குரங்கு அம்மை தொற்று ஒரு அரிய வகை நோய் . இந்த நோய் ஆபிரிக்காவின் சில பகு திகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது.இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது .
அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ல் கொங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா , கொங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது.இந்த குரங்கு அம்மை , பெரியம்மை , சின்னம்மையுடன் தொடர்புடையது.இந்த நோயினால் பாதிக் கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும் . இப்போது குரங்கு அம்மை தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது .அதன்பின்னர் இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தொற்று தாவியுள்ளது .
இந்நோய் பரவும் வழிகள்;
குரங்கு அம்மை வைரஷால் பாதிக் கப்பட்டவர் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது இந்த குரங்கு அம்மை தொற்று பரவுகிறது .
எலிகள் , அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடம் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது.இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது.
இறைச்சியை வேக வைக்காமல் சாப்பிடுவதாலும் ஏற்படுகிறது.இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் ஆடைகள் ,உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.
இதே போன்று பாதிக்கப்பட்டவர் தும்மும் போதும்,இருமும் போதும் வெளியாகும் நீர்த்துளி மூலமாகவோ அல்லது சுவாசிப்பதன் மூலமாகவும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது.
இந் நோய்க்கான அறிகுறிகள்;
குரங்கு அம்மை தொற்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5 – லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறி குறி தென்படும்.காய்ச்சல் , தலைவலி , உடல்வலி , வீக்கம் , முதுகுவலி , உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் உள்ளிட் டவை குரங்கு அம்மை நோய் தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும்.பின்பு அவை கொப்புளங்களாக மாறும் . அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.
மேலும். குரங்கு அம்மை தொற்று நோயை கண்டறிய பாதிக்கப்பட்ட நபரின் காயங்கள் அல்லது உலர்ந்த மேலோடுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.மேலும் நோயை உறுதிப்படுத்த பி.சி.ஆர் . சோதனை
செய்யப்படுகிறது.
சிகிச்சை முறைகள் ;
குரங்கு அம்மையை குணப்படுத்த தற்போது தனியாக மருந்துகள் என எதுவும் கிடையாது . இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறப்பு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்கலாம் .
இதன் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
குரங்கு அம்மை மற்றும் பெரியம்மைக்கு இடையே நிறைய ஒற்றுமை இருப்பதால் , பெரியம்மைக்கான தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.
ஆய்வுகளின்படி , குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் இம்வா னெக்ஸ் பெரியம்மை தடுப்பூசி சுமார் 85 சதவீ தம் பயனுள்ளதாக இருக்கும்.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , குரங்கு அம்மைக்கு புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவற்றில் ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெரியம்மை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட அண்டிவைரஸ் ஏஜென்ட் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க உரிமம் பெற்றறுள்ளது.
இந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டியவை ;
வேகாத இறைச்சி வகைகளை உண்ணாது தவிர்க்க வேண்டும் , விலங்குகளுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும்
பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் போது கைகளை சவர்க்காரம் அல்லது ரனிடைசரை பயன்படுத்துவது போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும்.
மேலும் மகப்பேற்று வைத்திய நிபுணர் கூறுகையில் ;
இந்நோயினை பற்றி தற்போது ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன அந்தவகையில் கிடைக்கப்பெற்ற தரவின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் மற்றவர்களை விட நோயெதிர்ப்பு சக்தி குறைந்த காரணத்தினால் கர்ப்பிணி பெண்கள் இந்த நோயக்கு இலகுவாக தாக்கப்படலாம் .
வயிற்றல் உள்ள குழந்தைக்கு தாயின் தொப்புள் கொடி மூலம் கடத்தப்படலாம் எனவே இவர்களை பராமரிக்க கூடியளவு கவனம் எடுக்க வேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.