பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜூன் 6ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் மற்றுமொரு நபருக்கு எதிராக 64 மில்லியன் ரூபாவில் எஞ்சிய பணத்தை கோரி வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

விசாரணைகளின் ஆரம்பம் முதல் நீதிமன்றங்களைத் தவிர்த்து வந்த மூன்றாவது குற்றவாளியான நரேஷ் குமார் ஃபரீக் ஆஜராகாத நிலையில் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 6, 2015 மற்றும் ஜூன் 2, 2015 க்கு இடையில் குற்றங்களைச் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளான பிரசன்ன ரணதுங்க, மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *