வார இறுதியில் மீண்டும் ஒரு எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடையும்! லிட்ரோ அறிவிப்பு

இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு எரிவாயுக் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் ஊடகப் பேச்சளார் கேதீஷ்வரம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இன்றைக்கு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொண்ட பின்னர் எரிவாயு இறக்கப்படும்.

இன்று தொடக்கம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 50000 எரிவாயு சிலிண்டர்கள் வீதம் விநியோகிக்கப்படும். அதில் சுமார் 30000 சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் விநியோகிக்கப்படும்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் இடங்கள் குறித்த விபரங்களை அதன் இணையத்தளத்தில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *