கொழும்பு துறைமுகத்தில் இலவச துவிச்சக்கரவண்டி சேவை

கொழும்பு, ஜுன் 01

கொழும்பு துறைமுகத்தில், இலவச துவிச்சக்கரவண்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்துக்குள் வருபவர்கள் இலகுவாக நடமாடுவதற்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகம் 469 ஹெக்டேர் (1,160 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் துறைமுக ஊழியர்கள் பயணிப்பதற்கு மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக துவிச்சக்கரவண்டிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்காக 100 துவிச்க்கர வண்டிகள் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு 100 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான்ன இது தொடர்பில் பேசுகையில் ‘கொழும்பு துறைமுகம் இடையூறின்றி தொடர்ந்து இயங்குகிறது. ஆனால், சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன. எமக்கு தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் விநியோகம் செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகமானது நெருக்கடிகளை சமாளித்து இயங்கும் பொறிமுறையைக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இப்பிராந்தியத்தில் திறந்திருந்த சில துறைமுகங்களில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும்.

துறைமுகத்திற்கு வருபவர்கள் மற்ற வாகனங்களுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தும் வகையில், பயன்படுத்தப்படாதிருந்த ரயில் பாதையை சைக்கிள் பாதையாக மாற்றி அமைத்துள்ளோம். இலங்கையை கடுமையாக பாதித்துள்ள பொருளாதார பிரச்சனைகளில் இருந்து துறைமுகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நெருக்கடி துறைமுகத்தில் செயல்பாடுகளை சீர்குலைக்கவில்லை. வேறு இடங்களில் எரிபொருளை பெறுவதற்கு சிரமப்படும் கப்பல்துறை தொழிலாளர்களுக்கு மட்டும், துறைமுகம் தனது சொந்த இருப்புகளிலிருந்து எரிபொளை வழங்கி வருகிறது.

எங்களிடம் எரிபொருள் கையிருப்பு இருப்பதால் நாங்கள் வழக்கம் போல் எங்கள் வேலையைச் செய்கிறோம் எனவும் பிரசாந்த ஜயமான்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *