
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவரது பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து அவர் ஹோமாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் பிபிலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.