
வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால விசாவினை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டொலர் இருப்பினை அதிகரித்துக்கொள்வதற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
GOLDEN PARADISE என இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஒன்லைன் வாயிலாகவும் இதனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர் ஒருவருக்கு 10 வருடத்திற்கான வதிவிட விசாவினை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைப்புச் செய்யும் வெளிநாட்டவர்கள் ஒரு வருடத்திற்கு பின்னர் 50 ஆயிரம் டொலர்களை மீளப்பெறுவதற்கு முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 வருடங்களுக்கு குறித்த வெளிநாட்டவரின் கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் டொலர்கள் எஞ்சியுள்ள மிகுதியாக பேணப்படுதல் அவசியமாகும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்