கொழும்பு, ஜுன் 01
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பித்த கடிதத்தை மீளப் பெற்றுக் கொண்டதையடுத்து இந்த போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் இலங்கை அணியில் பானுக ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
