
கொழும்பு,ஜுன் 01
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களில், சேர்ந்த இரண்டாயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 57 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 448 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.