
மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி
முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) மாலை நிகழ்ந்துள்ளது.
கைப்பிடி இல்லாத திரியானி களட்டியினை ( ஸ்கூட் ரைவர்) மின் இணைப்பியினுள் ( புளக்) சிறுமி செருகியதால் மின்சாரம் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் வெள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜினேசன் ஜினேஜினி எனும் 04 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.