மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை மறித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயுவை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் மூதூர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பி.ப 2.15 தொடக்கம் பி.ப. 3.15 வரை சுமார் ஒரு மணிநேரம் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் திருகோணமலை மட்டக்களப்பு வீதி உடனான போக்குவரத்து ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து இன்றைக்கு ஒன்பது நாட்களாக மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டு மூதூர் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய பகுதிகளுக்கு நேற்றிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மூதூருக்கு இன்னும் வழங்கப்படவில்லையென தெரிவித்தும் தமது பகுதிக்கு சமையல் எரிவாயுக்களை வழங்குமாறு தெரிவித்தும் சிலிண்டர்களை வீதியின் நடுவே வைத்து மக்கள் வீதியின் குருக்கே நின்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மூதூர் பொலிஸார், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் ஆகியோர் வருகை தந்து நாளையதினம் மூதூருக்கு 400 சமையல் எரிவாயுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *