
இரத்தினபுரி பகுதியில் அனர்த்த நிலைமைகளை ஆராய சென்ற அதிகாரியொருவர் வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
கிரியெள்ள அனர்த்த நிவாரண அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அதிகாரி கடமைகளை முடித்து வீடு திரும்பிய நிலையில், இந்த அனர்த்ததில் சிக்குண்டுள்ளார்.
தமது வீட்டுக்கு அருகில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களில், சேர்ந்த இரண்டாயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 57 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க்பட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்க்பட்டுள்ளதாக அனர்த்த முகதமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 448 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் 66 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க கடற்படையின் 13 குழுக்கள் சேவையில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கபட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக பாதிக்க்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணை நிதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரினால் திரைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு எச்சரிக்கை
இதன்படி, இந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியுள்ள, பெல்மடுல்ல, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்சிங்கள, வரக்காபொல, கேகாலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்
இதேவேளை, மழையுடனான வானிலைக்காரணமாக களு கங்கை,
நிலவளா கங்கை,களனி கங்கை மற்றும் அத்தனகளு ஓயா ஆகியன பெருக்கெடுத்துள்ளதினால், ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
நீர்பாசன திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
இதனால், குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும்,வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுஇ வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?